நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017

545

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி:

செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில், 05-11-2017 மாலை 5 மணிக்கு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மாநில மாணவர் பாசறைச் செயலாளர் கிருஷ்ணன் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். செஞ்சி தொகுதி துணைச் செயலாளர் தமிழ்முன் அன்சர் மற்றும் செஞ்சி தொகுதி மாணவர் பாசறைச் செயலாளர் இளவரசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்கள், தொகுதிச் செயலாளர் சுகுமார், தொகுதி இணைச் செயலாளர் பழனி மற்றும் தொகுதித் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் சக்திவாசன், மகளிர் பாசறைச் செயலாளர் பிரியா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017
அடுத்த செய்திதிருவில்லிபுத்தூர் | நலத்திட்ட நிகழ்வு | 08-11-2017