அறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர்

127

அறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர் | நாம் தமிழர் கட்சி

எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 27-01-2018 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு அரியலூரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 27-01-2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: பேருந்து நிலையம் முன்புறம், அரியலூர் நகராட்சி கட்டிடம் எதிரில்
தொடர்புக்கு: 90034 94263 / 99403 06040 / 90479 12476


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம்: நீதிவிசாரணை தேவை, மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்