டெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கன்னியாகுமரி

56

டெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – நாகர்கோவில் | நாம் தமிழர் கட்சி

20-08-2017 அன்று நாம் தமிழர் கட்சி – நாகர்கோவில் நகரம் சார்பில் நாகர்கோவில் நகரத்திற்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதி 3 -வது வார்டில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தி நிலவேம்பு மூலிகைச்சாறு கொடுக்கப்பட்டது. இதன்மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். அதன் பிறகு வாக்காளர் அட்டை திருத்தம் செய்வதற்கான உதவி முகாம் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் 45 பேர் தங்களை உறுப்பினராக நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.

செய்தி: செகநாதன், மாவட்ட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர், கன்னியாகுமரி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் – பூந்தமல்லி
அடுத்த செய்திசிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை